Published : 27 Aug 2016 10:22 AM
Last Updated : 27 Aug 2016 10:22 AM

யுவராஜ் அணி வெற்றி

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் டிராபியில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா ரெட் அணியும், சுரேஷ் ரெய்னா தலைமையிலான இந்தியா கிரீன் அணியும் மோதின. 4 நாட்கள் போட்டியான இந்த ஆட்டம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்றது.

இந்தியா ரெட் முதல் இன்னிங்ஸில் 161 ரன்களும், இந்தியா கிரீன் 151 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ரெட் அணி 116.5 ஓவரில் 486 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அபிநவ் முகுந்த் 169, ஷட்டர்ஜி 114, குர்கீரத் சிங் 82 ரன்கள் விளாசினர். இந்தியா கிரீன் தரப்பில் கோபால் 5 விக்கெட் கைப்பற்றினார்.

497 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்தியா கிரீன் அணி கடைசி நாளான நேற்று 56.2 ஓவர்களில் 277 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரெய்னா 90, ராபின் உத்தப்பா 72 ரன்கள் சேர்த்தனர். 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா ரெட் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x