

செயிண்ட் லூசியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸில் தோற்றது, ஆனால் மே.இ.தீவுகளால் இந்திய அணி முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி தொடர்ந்து தவண், ராகுல் தொடக்கத்தையே தக்க வைத்துள்ளது, புஜாரா நீக்கப்பட்டு ரோஹித் சர்மா வந்துள்ளார், அதே போல் மிஸ்ராவுக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ்வுக்குப் பதில் புவனேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணி வருமாறு: தவண், ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரஹானே, அஸ்வின், சஹா, ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ் குமார்.
மே.இ.தீவுகள்: கே.சி.பிராத்வெய்ட், ஜான்சன், டேரன் பிராவோ, மர்லன் சாமுவேல்ஸ், ஜெர்மைன் பிளாக்வுட், ராஸ்டன் சேஸ், டவ்ரிச், ஹோல்டர், கமின்ஸ், ஜோசப், கேப்ரியல்.
பிட்சில் முதல் நாள் ஓரளவுக்கு பவுன்ஸ் இருக்கும் என்று தெரிகிறது, அதனை முதலில் பயன்படுத்த ஹோல்டர் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், கோலி வழக்கமான ஆக்ரோஷ மனோபாவத்துடன், தான் டாஸ் வென்றிருந்தால் எப்படியும் முதலில் பேட்தான் செய்திருப்பேன் என்றார்.