Published : 26 Sep 2018 08:32 AM
Last Updated : 26 Sep 2018 08:32 AM

பாரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் ஆதித்யா கிரி

28-வது அகில இந்திய ஜிவி மவ்லாங்கர் பாரா துப்பாக்கி சுடு தல் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை ஆவடியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஆதித்யா கிரி, ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் புரோன் பிரிவில் தங்கப் பதக்கமும், ஸ்டான்டிங் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

இந்த ஆண்டில் மதுரையில் நடைபெற்ற மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரி லும் ஆதித்யா கிரி, 2 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்திருந்தார். இதனால் அவர் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிக்கும் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஆதித்யா கிரி கடந்த ஒரு வருடமாக, சென்னை போரூர்  ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டு அறிவியல் மையத் தின் பயிற்சியாளரான ராமன்பிரீத் கவுரிடம் தீவிரபயிற்சி மேற் கொண்டு வருகிறார்.

பாராலிம்பிக்ஸில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப் பதையே ஆதித்யா கிரி, பிரதான இலக்காக கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x