Published : 21 Sep 2018 12:34 PM
Last Updated : 21 Sep 2018 12:34 PM

உஸ்மான் கானின் ஷூலேசைக் கட்டிவிட்ட யுவேந்திர சாஹல்: நெகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்கள்; வைரலாகும் போட்டோ

எப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடக்கிறதோ அப்போதெல்லாம் இரு நாட்டு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்வது ஒன்றும் புதிதில்லை. கடந்த புதன்கிழமை அன்று நடந்த ஆசியக் கோப்பையிலும் அதுவேதான் நடந்தது.

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னால் இருந்தே ஹாங்காங் அணியுடனான இந்திய அணியின் விளையாட்டை ஒப்பிட்டு, பாக். ரசிகர்கள் இந்திய அணியைக் கிண்டல் செய்தனர். போட்டியின்போது பாக். அணியை இந்திய ரசிகர்கள் கேலி செய்தவண்ணம் இருந்தனர்.

இரு நாட்டு ரசிகர்களும் ஒருசேர நெகிழ்ந்த தருணமும் வந்தது. அது இந்திய வீரரான யுவேந்திர சாஹல், பாகிஸ்தான் வீரரான உஸ்மான் கானின் ஷூ லேசைக் கட்டிய வேளை. அந்த செயல் இரண்டு நாட்டு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சாஹல், உஸ்மானின் ஷூலேசைக் கட்டும் புகைப்படத்தைப் பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x