Published : 14 Sep 2018 03:25 PM
Last Updated : 14 Sep 2018 03:25 PM

கோலி இல்லை என்றாலும் இந்திய அணி வலுவாகவே உள்ளது: ஆசியக் கோப்பை குறித்து பாக். வீரர்

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி இல்லை என்றாலும் இந்திய அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்க உள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இதில் ரோகித் சர்மா  தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் இலங்கையும், வங்க தேசமும் மோத உள்ளன.

இந்த நிலையில் ஆசியக் கோப்பை போட்டியில் கோலி இடம்பெறாமல் இருப்பது குறித்து பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம்  கூறும்போது, "இந்தியா சிறந்த அணி. கோலி அணியில் இடம்பெறாமல் இருப்பது சிறிய வித்தியாசத்தை ஏற்படுத்தினாலும், கோலி இல்லாவிட்டாலும் இந்தியா பேட்டிங்கில் வலுவாகவே உள்ளது.

தற்போது எங்களது முழு கவனமும் ஹாங்காங் உடனான முதல் போட்டியின் மீதே உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கும் அழுத்தம் அதிகமாகவே இருக்கும் ஆனால் என்னைப் பொறுத்தவரை அனைத்துப் போட்டிகளும் சமமானவை" என்றார்.

ஆசியக் கோப்பை போட்டியில் வரும் புதன்கிழமை இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் மோத உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x