Published : 09 Sep 2018 09:35 AM
Last Updated : 09 Sep 2018 09:35 AM
உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார்.
தென் கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான டபுள் ட்ராப் பிரிவில் இந்தியாவின் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்றார். இறுதி சுற்றில் அங்குர் மிட்டல், சீனாவின் யியங், சுலேவேக்கியாவின் ஹுபர்ட் ஆகியோர் தலா 140 புள்ளிகள் பெற்று முதலிடம் வகித்தனர். இதனால் வெற்றியை தீர் மானிக்க ஷூட்-ஆஃப் முறை கடைபிடிக்கப் பட்டது. இதில் அங்குர் மிட்டல் 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார். யியங் வெள்ளிப் பதக்கமும், ஹூபர்ட் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
அணிகள் பிரிவில் அங்குர் மிட்டல், முகமது அசாப், ஷர்துல் விஹான் ஆகியோரை இந்திய அணி 409 புள்ளிகளுடன் வெண்கலப் பதகக்கம் கைப்பற்றியது. சீன அணி 410 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், இத்தாலி அணி 411 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் பெற்றன. மகளிருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் தகுதி சுற்றில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 1170 புள்ளிகளுடன் 9-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார். முதல் 8 இடங்களை பிடிப்பவர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் அஞ்சும் மவுத்கில் வெளியேறினார்.
8-வது இடம் பிடித்த சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டினும், அஞ்சும் மவுத்கிலும் ஒரே புள்ளிகளையே பெற்றனர். ஆனால் இலக்கின் உள்வட்டத்துக்குள் நினா கிறிஸ்டின் 66 புள்ளிகளை சேர்த்த நிலையில், அஞ்சும் மவுத்கில் 56 புள்ளிகள் மட்டுமே சேர்த்திருந்தார். இதனால் இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை அஞ்சும் மவுத்கில் இழந்தார். இதேபோல் 26 மீட்டர் பிஸ்டல் பிரிவு தகுதி சுற்றில் இந்தியாவின் மனு பாகர் 584 புள்ளிகளுடன் 10-வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT