Published : 25 Sep 2014 11:13 AM
Last Updated : 25 Sep 2014 11:13 AM

இந்தியாவுடனான ஒருநாள் தொடர்: மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு - காயம் காரணமாக கெயில் இடம் பெறவில்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டுவைன் பிராவோ தலைமையிலான அந்த அணியில் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெயில் காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதேநேரத்தில் ஆல்ரவுண்டர் சாமுவேல்ஸ், டுவைன்ஸ்மித், வேகப்பந்து வீச்சாளர் ஜெரோம் டெய்லர் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சாமுவேல்ஸும், ஸ்மித்தும் நியூஸிலாந்து மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான தொடர்களில் விளையாடவில்லை. காயத்துடன் தொடர்ந்து போராடிய ஜெரோம் டெய்லர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். கிர்க் எட்வர்ட்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிகிதா மில்லர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். 5 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடர் வரும் அக்டோபர் 8-ம் தேதி கொச்சியில் தொடங்குகிறது.

அணி விவரம்: டுவைன் பிராவோ (கேப்டன்), டேரன் பிராவோ, ஜேசன்ஹோல்டர், லியோன் ஜான்சன், சுநீல் நரேன், கிரண் போலார்ட், தினேஷ் ராம்தின், ரவி ராம்பால், கெமர் ரோச், ஆண்ட்ரே ரஸல், டேரன் சமி, மார்லான் சாமுவேல்ஸ், லென்ட் சிம்மன்ஸ், டுவைன் ஸ்மித், ஜெரோம் டெய்லர்.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x