Last Updated : 18 Sep, 2018 07:16 PM

 

Published : 18 Sep 2018 07:16 PM
Last Updated : 18 Sep 2018 07:16 PM

அது பற்றி பேசவோ விமர்சகர்களுடன் விவாதிக்கவோ விரும்பவில்லை: ரிஷப் பந்த் மனம் திறப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பந்த் அதிக ரன்களை ‘பை’ முறையில் கோட்டை விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது.

ஆனால் இந்தத் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் டியூக் பந்தில் அதிக வேகத்துடன் ஸ்விங் செய்தனர் பல பந்துகள் மிகவும் வெளியே சென்றது உலகின் எந்த கீப்பரும் அவற்றைத் தடுத்திருக்க முடியாது என்றே போட்டியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் என்ற தொனியில் ரிஷப் பந்த் பதிலளித்துள்ளார்.

பிடிஐக்கு அவர் அளித்த பேட்டியில் இதுபற்றி கூறும்போது,

நிச்சயம் விக்கெட் கீப்பராக என் கணக்கில் அவ்வளவு ‘பை’ ரன்கள் காண்பிப்பது வெறுப்பேற்றுவதாகவே உள்ளது. ஆனால் அந்த ‘பை’களுக்கு நான் காரணமல்ல.

போட்டியை ஒருவர் பார்க்காமல் ஸ்கோர் அட்டையை மட்டும் பார்த்தல் என் பெயருக்கு நேராக இவ்வளவு ‘பை’ ரன்கள் என்று இருக்கும்.

ஸ்கோர்கார்டைப் பார்க்காமல் போட்டியைப் பார்த்தவர்களுக்குத் தெரியும் அந்தப் பந்துகள் மிகவும் வெளியே சென்ற பந்துகள் என்பது.

இந்த விவகாரத்தில் நான் தான் பை விட்டேனா என்பது குறித்து நான் விவாதிக்க விரும்பவில்லை. ஆட்டத்தின் ஒரு அங்கம் இவை.

இங்கிலாந்தில் பந்தின் கோணத்தைக் குறைக்க வேண்டும். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களை விட இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த், ஷமி, பும்ரா சீரான முறையில் 140கிமீ வேகம் தொட்டனர். ஸ்டம்பைக் கடந்து பந்து வரும்போது பந்தின் தையல் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஆடிக் கொண்டே வந்தது.

நான் 100% தயாராக இருந்தேன், இருப்பினும் சில பந்துகள் என் கட்டுப்பாட்டையும் மீறியவை. அது பற்றி நான் பேச விரும்பவில்லை, விடுங்கள், இஷாந்த், ஷமி பந்துகள் ஸ்விங்குடன் அதிகம் நிலையற்ற விதத்தில் ஆட்டம் கண்டபடியே வருகின்றன.

இவ்வாறு கூறினார் ரிஷப் பந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x