Published : 24 Jun 2019 09:00 AM
Last Updated : 24 Jun 2019 09:00 AM
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர்கள் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
இந்தத் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “மேற் கிந்தியத் தீவுகள் அணிக் கெதிரான தொடரில் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும்.
இருப்பினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரு வரும் களம் இறங்குவார்கள்.
மேலும் சிலருக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, ஹனுமா விஹாரி உள் ளிட்டோர் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான தொடரில் விளையாட வாய்ப்புள்ளது.
கிருணல் பாண்டியா, ஷிரேயஸ் ஐயர், ராகுல் சஹார், சஞ்சு சாம்சன் ஆகியோர் டி20 தொடரில் விளையாடுவர். டி20 தொடரானது புளோரிடா மாகாணத்திலுள்ள போர்ட் லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT