Published : 02 Jun 2019 04:23 PM
Last Updated : 02 Jun 2019 04:23 PM
வரும் வியாழனன்று ஆஸ்திரேலியா அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக நாட்டிங்கமில் மோதுகிறது. மே.இ.தீவுகள் அன்று பாகிஸ்தானை 105 ரன்களுக்கு பவுன்சர் வீசி மடக்கி போட்டியை மிகப்பெரிய அளவில் வென்றது.
ஆஸ்திரேலிய அணி ஆப்கான் அணியின் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு தன் முதல் போட்டியில் வென்றது. இந்நிலையில் வலுவான மே.இ.தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.
மே.இ.தீவுகள் அணியில் ஜேசன் ஹோல்டர், ஒஷேன் தாமஸ், ஆண்ட்ரே ரஸல் பாகிஸ்தான் பேட்ஸ்மென்களின் புருவத்துக்கு வீசி காலி செய்தனர். ஆஸி.க்கு எதிராக கிமார் ரோச் வந்து விட்டால் நிச்சயம் மே.இ.தீவுகளின் பவுலிங் பிரமாதமான அச்சுறுத்தலுடன் அமையும்.
ஆஸ்திரேலிய அணியிலும் மிட்செல் ஸ்டார்க், கமின்ஸ், கூல்ட்டர் நைல் போன்ற ஜாம்பவான்கள் உள்ளனர், விறுவிறுப்பான அந்தப் போட்டியை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அதே வேளையில் ஆஸி. பவுலர் கூல்ட்டர் நைல் மே.இ.தீவுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்:
“மே.இ.தீவுகளுக்கும் பவுன்சர் சிசிக்கை அளிக்க வேண்டும். இல்லையெனில் முன் காலில் வந்து எங்கு வேண்டுமானாலும் நம்மை வெளுத்துக் கட்டி விடுவார்கள். நிச்சயம் நாங்கள் அவர்களுக்குக் கொடுப்போம், அவர்களுக்கு மட்டுமல்ல எல்லா அணிகளுக்குமே நாங்கள் கன்னத்துக்கு வீசுவோம். ஓவருக்கு 2 பவுன்சர்களை பயன்படுத்தியே தீருவோம்.
மைதானங்கள் சிறியது, பிட்சும் பிளாட்டாக உள்ளது. ஆகவே பவுன்சர்களை பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வீச வேண்டும்” என்றார் கூல்ட்டர் நைல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT