Published : 13 Jun 2019 08:27 PM
Last Updated : 13 Jun 2019 08:27 PM

இந்தியா - நியூஸி. போட்டி மழையால் கைவிடப்பட்டது: இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3வது இடத்துக்கு முன்னேற்றம்

நாட்டிங்கம் மைதானத்தில்  நடைபெறவிருந்த இந்தியா-நியூஸிலாந்து உலகக்கோப்பை 18வது போட்டி டாஸ் போடாமலேயே கைவிடப்பட்டது. நியூஸிலாந்து 7 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது, இந்திய அணி ஒரு புள்ளி கூடுதலாகப் பெற்று 5 புள்ளிகளுடன் இங்கிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

 

ஆஸ்திரேலியா அணி 4 போட்டிகளில் 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 2ம் இடம் வகிக்கிறது.

 

இந்த உலகக்கோப்பைத் தொடரில் இதுவரை ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் மழை முடிவுகளிலிருந்து தப்பித்த அணிகளாகிறது.

 

“சூரிய வெளிச்சத்தை பார்த்து 4 நாட்கள் ஆகிறது, எனவே இது எங்களுக்கு ஒன்றும் ஆச்சரியமாகப்படவில்லை” என்கிறார் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்.

 

நியூஸிலாந்தும், இந்தியாவும் இன்னும் போட்டியைத் தோற்கவில்லை.

 

இதுவரை தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ், இலங்கை-பாகிஸ்தான்,  இலங்கை-பங்களாதேஷ் போட்டிகள் வாஷ் அவுட் ஆகியுள்ளன. இன்று இந்தப் பட்டியலில் இந்தியா-நியூசிலாந்து போட்டியும் இணைந்துள்ளது.

 

ஒவ்வொரு போட்டிக்கும் இன்னொரு கூடுதல் நாள் வைப்பது போட்டித் தொடரின் நீளத்தை அதிகரிக்கும் மேலும் ஒவ்வொரு போட்டியையுமே மறுநாள் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x