Published : 15 Jun 2019 04:09 PM
Last Updated : 15 Jun 2019 04:09 PM

டாஸ் வென்று இலங்கை பீல்டிங்: ஆஸ்திரேலியா நல்ல அடித்தளத் தொடக்கம்

லண்டனில் நடைபெறும் உலகக்கோப்பை  2019- 20வது போட்டியில் இலங்கை கேப்டன் கருணரத்னே டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணி நிதானமாகத் தொடங்கி நல்ல அடித்தளத்திற்கான தொடக்கமாக 13 ஒவர்களில் 69 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் ஆடி வருகிறது.

 

டாஸ் வென்று பேட் செய்யாததற்கு இலங்கை அணியின் தன்னம்பிக்கையின்மையே காரணம். பேட்டிங் பிட்சில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்துள்ளது ஆபத்தானது.

 

ஏரோன் பிஞ்ச் 39 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 42 ரன்களுடனும், வார்னர் 39 பந்துகளில் 22 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

 

இலங்கை வேகப்பந்து வீச்சு ஃப்ரெண்ட்லியாகவே உள்ளது, 130-132 கிமீ வேகம்தான் வீசப்படுகிறது. கருணரத்னே நேற்று கூறியது போல் பெரிய அளவில் ஆர்ப்பாட்டாமாகவெல்லாம் ஆட முடியாது எங்களுக்கு இருக்கும் வரம்புகளுக்குள்தான் ஆட முடியும் என்றார். அப்படித்தான் ஆடுகின்றனர்.

 

ஆனால் ஏரோன் பிஞ்சுக்கு ஒரு எல்.பி. முறையீடு தவிர பெரிதாக இலங்கைக்கு எதுவும் நடக்கவில்லை, அந்த எல்.பி. முறையீடும் நாட் அவுட் ஆனது. 13 ஓவர்களில் 46-7 டாட்பால்களை வீசியிருக்கிறார்கள் என்றால் மீதி 32 பந்துகளில் 69 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது, ஸ்மார்ட் ஸ்ட்ரைக் ரேட் 200%க்கும் மேல் உள்ளது, இதன் அர்த்தம் என்னவெனில் பவுண்டரி பந்துகள் அதிகம் வீசுகின்றனர் என்று அர்த்தம்.

 

இடது கை வேகப்பந்து வீச்சாளர் இசுரு உதானா மட்டுமே 3 ஓவர்கள் 11 ரன்கள் பவுண்டரி இதுவரை கொடுக்கவில்லை. மலிங்க, பிரதீப், பெரேரா என்று பவுண்டரி பால்களை கொடுக்கின்றனர்.

 

ஆஸ்திரேலியா அணி 15 ஓவர்கள் முடிவில் 76 ரன்கள், விக்கெட் இல்லை, இது இலங்கைக்கு மிகவும் ஆபத்தானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x