Published : 15 Jun 2019 05:29 PM
Last Updated : 15 Jun 2019 05:29 PM

14வது ஒருநாள் சதமெடுத்தார் ஏரோன் பிஞ்ச்: உஸ்மான் கவாஜாவின் சாதனையைக் கடந்தார்

ஓவலில் நடைபெறும் உலகக்கோப்பை 2019-ன் 20வது போட்டியில் இலங்கை அணியினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியா 35 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்து பெரிய இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

 

தனது 14வது ஒரு நாள் சதத்தையும் உலகக்கோப்பைகளில் தன் 2வது சதத்தையும் எடுத்து சாதனை புரிந்துள்ள ஏரோன் பிஞ்ச் 109  ரன்களுடனும் (9 பவுண்டரி 4 சிக்சர்கள்) ஸ்டீவ் ஸ்மித் 34 பந்துகளில் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

 

முன்னதாக திருப்தியளிக்காத இன்னிங்சை ஆடிய வார்னர் 48 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுத்து டிசில்வாவின் ரவுண்ட் த விக்கெட் பந்து நேராக ஸ்டம்புக்கு வர ஒதுங்கிக் கொண்டு கட் ஆட முயன்று ஸ்டம்பைக் கோட்டை விட்டார்.

 

உஸ்மான் கவாஜா இன்று 3ம் நிலையில் இறக்கப்பட்டார். இவரும் டிசில்வாவின் ஸ்பின்னுக்கு ஸ்வீப் ஷாட்டில் டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார், நல்ல ஷாட் ஆனால் பீல்டர் கைக்குச் சென்றது.

 

ஏரோன் பிஞ்ச் 97 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் சதம் கண்டார். உலகக்கோப்பையில் ஒரு சதத்துக்கும் மேலாக அடித்த வீரர்களில் 7வது ஆஸ்திரேலிய வீர்ரர் ஆனார் பிஞ்ச், அதே போல் 2 உலகக்கோப்பை சதங்களில் வார்னருடன் இணைந்தார் பிஞ்ச்.

 

இந்த சதத்தின் மூலம் 2019-ல் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற விதத்தில் கவாஜாவைக் கடந்தார் பிஞ்ச்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x