Published : 24 Jun 2019 08:58 AM
Last Updated : 24 Jun 2019 08:58 AM

தோனி, ஜாதவ் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் டெண்டுல்கர் அதிருப்தி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ் ஆகியோர் ஆடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று இந்திய அணியின் முன் னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்தியா கடுமையாகப் போராடி வெற்றி கண்டது. இந்த போட்டி குறித்து சச்சின்கூறும்போது, “இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. இந்திய வீரர்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். குறிப்பாக எம்எஸ் தோனி -கேதர் ஜாதவ் ஜோடி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை.அவர்கள் இருவரும் மிகவும் மந்தமாக விளையாடினார்கள்.

நாம் 34 சுழற்பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 119 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தோம். விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு 38-வது ஓவர் முதல் 45-வது ஓவர் வரை அதிக ரன்களைச் சேர்க்கவில்லை. நடுவரிசை ஆட்டக்காரர்களிடமிருந்து எதிர்பார்த்த ரன்கள் இல்லை. அணியின் மூத்த வீரரான தோனி,இந்த நேரத்தில் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆடி ரன்கள் குவித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் நாம் அதிக ரன்கள் சேர்த்திருப்போம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x