Published : 16 Jun 2019 04:49 PM
Last Updated : 16 Jun 2019 04:49 PM

ராகுல் 57 ஆட்டமிழந்தார்: வஹாப் ரியாஸுக்கும் இருமுறை எச்சரிக்கை

இந்தியா பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்காக 23.4 ஓவர்களில் 136 ரன்களைச் சேர்த்த பிறகு கே.எல்.ராகுல் வஹாப் ரிஹாஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

 

விராட் கோலி களமிறங்கியுள்ளார். ரோஹித் சர்மா இன்னொரு முனையில் மிகச் சரளமான இன்னிங்சில் 65 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 75 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார்.

 

கே.எல்.ராகுல் உயர் அழுத்த இந்தியா-பாக் போட்டியில் தன் பங்கைச் சிறப்பாகச் செய்து 78 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸ் வீசிய பந்தை ட்ரைவ் ஆட முயன்றார் பந்து ஆஃப் திசையில் பாபர் ஆஸம் கையில் எளிதான கேட்ச் ஆனது. ராகுல் ஆட்டமிழந்தார்.

 

மொகமது ஆமிர் முதலில் பந்து வீசி விட்டு பிட்சில் ஓடி வந்ததற்காக இருமுறை அதிகாரப் பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இன்னொரு முறை பிட்சில் ஓடிவந்தால் அவர் இனி பந்து வீச முடியாது.

 

அதே போல் ராகுல் ஆட்டமிழந்த அதே ஓவரில் வஹாப் ரியாஸ் ரவுண்ட் த விக்கெட்டில் பந்தை வீசி விட்டு பிட்சிற்குள் ஓடினார், இதனையடுத்து வஹாப் ரியாஸுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது, நடுவர் 2 என்று கையைக் காட்டினார்.

 

அதாவது இருமுறை வஹாப் ரியாஸுக்கும் அதிகாரபூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆமிர், ரியாஸ் இருவரும் இன்னொரு முறை தவறு செய்தால் அந்த நொடி முதல் இந்தப் போட்டியில் பவுலிங் செய்ய முடியாது.

 

பாகிஸ்தான் தத்தளித்து வரும் நிலையில் இது ஒருசிக்கல். தற்போது இந்திய அணி 25 ஓவர்களில் 146/1 என்று ஆடி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x