Published : 31 Mar 2018 09:02 AM
Last Updated : 31 Mar 2018 09:02 AM
காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.
மிட்செல் ஸ்டார்க் தற்போது தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த டெஸ்ட் போட்டியின்போது அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் அவரது காலில் ஏற்பட்ட காயத்தை ஆய்வு செய்தனர். அதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் ஸ்டார்க் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக சாட் சாயர்ஸ் அணியில் இடம்பெற்றார்.
மேலும் காயம் காரணமாக அவர் ஐபிஎல் போட்டியிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ரூ.9.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. .
தொடர்ந்து அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மிட்செல் ஸ்டார்க் தென் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்.
அங்கு அவருக்கு முழு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT