Published : 10 Mar 2018 11:12 AM
Last Updated : 10 Mar 2018 11:12 AM

இந்திய மகளிரணி அசத்தல்

மகளிர் ஹாக்கியில் தென் கொரியா அணிக்கு எதிரான 4-வது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது.

இந்திய மகளிர் ஹாக்கி அணி தென் கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையிலான 4-வது ஆட்டம் நேற்று சியோலில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் குர்ஜித் கவுர், தீபிகா, பூணம் ராணி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தென் கொரிய அணி தரப்பில் மி ஹைன் பார்க் ஒரு கோல் அடித்தார். இந்த வெற்றியால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை இந்திய அணி 3-1 என கைப்பற்றியது. கடைசி போட்டி நாளை நடைபெறுகிறது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x