Published : 12 Mar 2018 09:45 AM
Last Updated : 12 Mar 2018 09:45 AM

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீரர் அகில் ஷெரனுக்கு தங்கம்

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய இளம் வீரர் அகில் ஷெரன் தங்கம் வென்றார்.

இதையடுத்து ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்ற 4-வது இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றார். இந்த போட்டிகள் மெக்ஸிகோ நாட்டின் குவாடல்ஜரா நகரில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் அகில் ஷெரன் புள்ளிகள் குவித்து தங்க பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அகில் ஷெரன் மொத்தம் 455.6 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரியா வீரர் பெர்ன்ஹார்ட் பிக்கிள் 452 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த நிலையில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை மனு பாகர் தகுதி பெற்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x