Published : 20 Mar 2018 09:08 AM
Last Updated : 20 Mar 2018 09:08 AM

தாய் சூ யிங் சாம்பியன்

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் தொடரில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான தைவானின் தாய் சூ யிங் சாம்பியன் பட்டம் வென்றார்.

பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் அவர் 22-20, 21-13 என்ற நேர் செட்டில் 2-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தினார். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட முதல் வீராங்கனை என்ற பெயரை பெற்றார் தாய் சூ யிங். ஆடவர் பிரிவில் சீனாவின் ஷி யூகி பட்டம் வென்றார். அவர், இறுதிப் போட்டியில் தனது சகநாட்டைச் சேர்ந்த லின் டானை 21-19, 16-21, 21-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x