வெண்கலத்தோடு வெளியேறினார் சிந்து

வெண்கலத்தோடு வெளியேறினார் சிந்து
Updated on
1 min read

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி கண்டார். இதனால் அவர் வெண்கலப் பதக்கத்தோடு வெளியேற நேர்ந்தது.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற அரை யிறுதியில் சிந்து 17-21 16-21 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் கரோலினா மரினிடம் தோல்வி கண்டார். கிராண்ட்ப்ரீ கோல்டு பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனையான கரோலினா, இப்போது உலக பாட்மிண்டனில் பதக்கம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in