Published : 21 May 2019 02:19 PM
Last Updated : 21 May 2019 02:19 PM

தோனி பகிர்ந்த ரகசியம்

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் வீர்ர மகேந்திர சிங் தோனி தனது சிறுவயது ஆசை ஒன்றை தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படும் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தோனி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''நான் உங்களிடம் ரகசியம் ஒன்றைப் பகிர இருக்கிறேன். சிறுவயது முதலே எனக்கு கலைஞனாக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இருப்பினும் நான் கிரிக்கெட் விளையாட முடிவு செய்தேன். நிறைய போட்டிகளில் ஆடினேன். எனவே இந்தத் தருணத்தில் எனக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்துவிட்டேன்.

ஓவியக் கண்காட்சியை நடத்த இருக்கிறேன். இதற்கு சில காலம் தேவை. சில ஓவியங்களை வரைந்திருக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்று தெரிவித்த தோனி, தான் வரைந்த ஓவியங்களைக் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தோனி வரைந்த ஓவியங்களைப் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x