Published : 09 Apr 2019 09:04 PM
Last Updated : 09 Apr 2019 09:04 PM

என்ன இருந்தாலும் அவர் நம் உலகக்கோப்பை அணியின் கேப்டன்:  விராட் கோலி மீதான கிண்டல் குறித்து நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேதனை

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலி தலைமை ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து இன்னமும் ஒரு புள்ளியைக் கூட பெறாமல் போராடி வருகிறது.

 

இதில் இந்திய கேப்டனாக பல சாதனைகளைப் புரிந்து ‘கிங் கோலி’ என்று ரசிகர்ளால் செல்லமாக அழைக்கப்பட்டு வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கேப்டன்சியில் தோல்விகளைத் தழுவியது அவரது ரசிகர்களுக்கு வேதனை அளிக்கும் அதே வேளையில் விராட் கோலி மீது கடும் கேலியும் கிண்டலும் பெருகி வருகிறது.

 

கவுதம் கம்பீர் ஒரு முறை விராட் கோலி ஆர்சிபி அணியில் கேப்டனாக நீடிப்பது அதிர்ஷ்டம் என்றும் கேப்டன்சியில் அவர் அப்ரண்டீஸ் என்று கேலி செய்தார்.

 

இந்நிலையில் நடிகரும் இயக்குநர்/நடிகர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு தன் ட்விட்டர் பக்கத்தில் விராட் கோலிக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார்:

 

“விராட் கோலியை அனைவரும் கேலி கிண்டல் செய்வதைப் பார்க்க மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. ஒரு கட்டம் வரையில் அது வேடிக்கையாக இருந்தது. ஆனால் 6 போட்டிகளிலும் தோல்வி என்பது இதயத்தை சுக்குநூறாக்குகிறது.

 

கோலி தன் பங்கைச் சரியாகச் செய்கிறார், ஆனால் கிரிக்கெட் என்பது அணி மொத்தமும் பங்களிக்க வேண்டிய ஆட்டமாகும். மேலும் அவர் நம் உலகக்கோப்பை அணியின் கேப்டன்.

 

அவர் எப்போதையும் விட இன்னும் வலுவாக மீண்டு வருவார் என்று நான் உண்மையில் விரும்புகிறேன்” என்று வேதனையுடன் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x