Published : 25 Apr 2019 12:49 PM
Last Updated : 25 Apr 2019 12:49 PM
மே.இ.தீவுகள் உலகக்கோப்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அணியில் பிரமாதமான ஸ்பின்னரும் அதிரடி பேட்ஸ்மெனுமான சுனில் நரைன் இடம்பெறாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்த சுனில் நரைன் வேதனை தெரிவித்துள்ளார்.ஆனால் அவர் விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அணியில் இடம்பெறவில்லை.
அக்டோபர் 2016-க்குப் பிறகு சுனில் நரைன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடவில்லை. வலது நடுவிரலில் அவருக்கு சிறு தசைநார் கிழிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறார், ஐபிஎல் போட்டிகள் முடிந்தவுடன் அறுவைச் சிகிச்சை கூட நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே இவரால் சில ஸ்பின் பந்துகளை வீச முடியாமல் திணறி வந்தார்.
“நான் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆட விரும்பினேன். நான் சர்வதேச கிரிக்கெட்டை இழந்தேன், மே.இ.தீவுகள் அணிக்காகத்தான் என் இருதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த அணியையும் இழந்துள்ளேன.
என்னுடைய விரலும் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் தயாராகவில்லை, ஆனால் டி20 கிரிக்கெட் ஆட முடியும். ஏனெனில் இதில் 4 ஓவர்கள் மட்டுமே வீசப்போகிறோம். ஆனால் இதற்கே உடற்தகுதி நிபுணர் உதவியில்லாமல் முடியவில்லை. இதுதான் என்னை சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவிடாமல் செய்கிறது. நான் எனக்கும் என் அணிக்குமே நியாயம் கற்பித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் வேதனையாக உள்ளது.
தொடரின் பிறபகுதியில் வாய்ப்பு இருக்கலாம்... ஆனால் எனக்குத் தெரியவில்லை. ஆனால் மே.இ.தீவுகள் உலகக்கோப்பை அணியில் அங்கமாக இருக்க மனதார விரும்புகிறேன். 4 ஓஅர் முதல் 10 ஓவர்கள் வீசும் அளவுக்கு என் காயம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திருக்கிறேன்.
தேர்வுக்குழுவினர் என்னைத் தேர்வுக்குப் பரிசீலித்தனர் என்பது மகிழ்ச்சியும் ஊக்கமும் அளிக்கிறது. அவர்கள் நான் மீண்டும் ஆட வேண்டும் என்று விரும்புவதை இது காட்டுகிறது. அவர்களுடன் உரையாடல் வைத்துக் கொள்வது நல்லது.
விரல் ஓரளவுக்குச் சரியாகி வருகிறது கொஞ்சம் வேகத்துடன் வீச வேண்டுமெனில் விரலில் இன்னும் கொஞ்சம் தெம்பு வேண்டும். விரைவில் நான் மே.இ.தீவுகளின் ஒருநாள், டி20 அணிகளில் இடம்பெறுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சுனில் நரைன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT