Published : 16 Apr 2019 11:21 AM
Last Updated : 16 Apr 2019 11:21 AM

தோனி விளையாடாத நிலையில் தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார்: சுனில் கவாஸ்கர்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி விளையாடாத நிலையில் தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி  திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு தேர்வாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

இந்த நிலையில் தினேஷ் கார்திக் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “போட்டியின்போது தோனியால் உடல் நிலை சரியில்லாமல் இருந்து விளையாட முடியாமல் போனால் உங்களுக்கு சிறந்த முறையில் கீப்பிங் செய்யும் ஒருவர் தேவைப்படுவார். எனவே தினேஷ் கார்திக் சிறந்த விக்கெட் கீப்பர் என்று  நான் நினைக்கிறேன். அவர் அந்த இடத்துக்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் உலகப் கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாமல் போனது குறித்து,” ரிஷப் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்த முடிவு எனக்கு சிறிது ஆச்சரியத்தை அளித்தது. அவர் சிறப்பான பேட்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x