Published : 04 Apr 2019 12:37 PM
Last Updated : 04 Apr 2019 12:37 PM

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்: சிஎஸ்கேவின் தோல்வி குறித்து ஹர்பஜன்

அடிபட்ட சிங்கத்தோடமூச்சு காற்று அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும் என்று  தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 15வது போட்டியில் தோனி தலைமை சிஎஸ்கே அணி முதல் தோல்வியைத் தழுவியது. பாண்டியா சகோதரர்களின் ஆல்ரவுண்ட் ஆட்டத்தினால் மும்பை இந்தியன்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து ஹர்பஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அடிபட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமாக இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள். தமிழே வெறும் கைதட்டலை மட்டும் நீங்கள் தாருங்கள். @ChennaiIPL @IPL "தோல்வியின்றி வரலாறா"என்று பதிவிட்டுள்ளார்.

ஹர்ப்ஜான் குறிப்பிட்டுள்ள இந்த வசனம் கேஜிஎஃப் படத்தில் இடப்பெற்றிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x