Last Updated : 06 Apr, 2019 12:34 PM

 

Published : 06 Apr 2019 12:34 PM
Last Updated : 06 Apr 2019 12:34 PM

‘‘உங்களுக்கு ரஸ்ஸலைப் பற்றி தெரியவில்லை’’- ஷாருக் கான் புகழாரம்

ஆட்டம் இதோடு முடிந்தது என்று சொன்னவர்களே,  உங்களுக்கு ரஸ்ஸலைப் பற்றி தெரியவில்லைஎன்று கொல்கத்தா அணியின் ஆந்த்ரே ரஸ்லின் ஆட்டம் குறித்து ஷாருக் கான் புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று (ஏப்ரல் 5) நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 17வது போட்டியில் 205 ரன்களை எடுத்தும் கோலியின் ஆர்சிபி அணி வெற்றி பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 பந்துகளை மீதம் வைத்து 206/5 என்று அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களை, கொல்கத்தா அணியைச் சேர்ந்த ஆந்த்ரே ரஸ்ல் தனது அதிரடி மூலம் கலங்கடித்தார். இதன் மூலம் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றித் தொடர்பாக கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி திரையுலகினர் முன்னணி நடிகருமான ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஆட்டம் இதோடு முடிந்தது என்று சொன்னவர்களே, உங்களுக்கு கிரிக்கெட் தெரிந்திருக்கலாம் ஆனால் உங்களுக்கு ரஸ்ஸலைப் பற்றி தெரியவில்லை. வாவ் ரஸ்ல். நீங்கள் ஒரு சாம்பியன்.

க்ரிஸ் லின், நிதிஷ் ரானா, ராபின் உத்தப்பா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மொத்தமுமே சிறப்பாக ஆடினீர்கள். நீங்கள் ஒவ்வொருவருமே சிறப்பாக செயல்பட்டீர்கள். ஆனால் என்ன வார்த்தைகள் சொன்னாலும் அது இந்த படத்துக்கு ஈடாகாது என்பதை நீங்கள் எல்லாரும் ஒப்புக்கொள்வீர்கள்.

இவ்வாறு ஷாருக் கான் கூறியுள்ளார்.

'பாகுபலி' படத்தில் இடம்பெற்ற பிரபாஸின் புகைப்படத்தில், ஆந்த்ரே ரஸ்லின் புகைப்படத்தை மாற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் ஷாருக்கான். இந்த ட்வீட்டை மேற்கொளிட்டு  'பாகுபலி' படத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் “அருமையாக விளையாடினீர்கள் கொல்கத்தா அணி. ஜெய் மகிழ்மதி. இந்த உற்சாகத்தை அப்படியே தொடருங்கள்” என்று தெரிவித்துள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x