Published : 29 Apr 2019 08:41 PM
Last Updated : 29 Apr 2019 08:41 PM
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆடிவந்த ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப் தொடரிலிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்.
ஆஸ்திரேலிய உலகக்கோப்பை அணியுடன் இவர் தேசிய முகாமில் இணைகிறார். இவருக்கு அடுத்தபடியாக முன்னாள் ஆஸி. கேப்டன், நடப்பு ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஆகியோரும் ஐபிஎல் கிரிக்கெட்டை விடுத்து ஆஸ்திரேலியா அணியுடன் இணைகின்றனர்.
ட்விட்டரில் ஜேசன் பெஹ்ரெண்டார்ஃப் இது பற்றி கூறும்போது, “விவோ ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியதில் உற்சாகம். முதல் ஐபிஎல் அனுபவம் கிரேட். அருமையான உரிமையாளர், நன்றாக ஆடுங்கள் வீரர்களே, இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் சீசனில் பெஹ்ரண்டார்ஃப் 5 விக்கெட்டுகளை 5 போட்டிகளில் 165 ரன்களுக்குக் கைப்பற்றியுள்ளார்.
இவருக்கு உலகக்கோப்பை வாழ்த்துக்களையும் மும்பை ட்விட்டர் பக்கம் தெரிவித்துள்ளது.
மே 2ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT