Published : 05 Apr 2019 09:43 AM
Last Updated : 05 Apr 2019 09:43 AM

சூப்பர் கோப்பை கால்பந்து: அரை இறுதியில் சென்னை சிட்டி

சூப்பர் கோப்பை கால்பந்தில் சென்னை சிட்டி அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

புவனேஷ்வரில் நடைபெற்று வரும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியும், ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணியும் மோதின.

15-வது நிமிடத்தில் தாரிப் அகந்திடம் இருந்து பந்தை பெற்ற நெஸ்டர் கோர்டிலோ அற்புதமாக கோல் அடிக்க சென்னை சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் பெங்களூரு அணி போராடிய போதும் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி தனது 2-வது கோலை அடித்தது.

இந்தே கோலை பெட்ரோ மான்ஸி அடித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 2-0 என முன்னிலை பெற்றது. 65-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி, தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.

எனினும் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் சென்னை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x