Published : 05 Apr 2019 08:16 PM
Last Updated : 05 Apr 2019 08:16 PM

ஆர்சிபியில் சவுதி; கொல்கத்தா அணியில் மீண்டும் சுனில் நரைன்: ஆர்சிபி பேட்டிங்

பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் 2019-ன் 17வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ய விராட் கோலி, பார்த்திவ் படேல் பேட் செய்து வருகின்றனர்.

 

ஆர்சிபி அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, பவன் நெகி, டிம் சவுதி வந்துள்ளனர், ஷிம்ரன் ஹெட்மையர், உமேஷ் யாதவ் உட்கார வைக்கப்பட்டனர். கொல்கத்தா அணிக்கு சுனில் நரைன் மீண்டும் திரும்பியுள்ளார் நிகில் நாயக் நிக்கப்பட்டுள்ளார்.

 

உமேஷ் யாதவ் இந்த சீசனில் பவர் ப்ளேயில் விக்கெட் எடுக்காமல் ஓவருக்கு 9 ரன்களைக் கொடுத்துள்ளார், அதனால் ட்ராப்.

 

பிட்ச் அறிக்கையில் பேட்டிங் பிட்ச் என்று கூறப்பட்டுள்ளது, டெத் ஓவர்கள் பந்து வீச்சாளர்களுக்குக் கடினம். புள்ளிவிவரங்களின் படி 175-180 ரன் பிட்ச் ஆகும், ஆனால் இன்று 200+ பிட்ச்சாக இருக்கலாம் என்று மெக்கல்லம் தன் பிட்ச் அறிக்கையில் தெரிவித்தார்.

 

ஆர்சிபியின் தொடக்கமும் இதை உறுதி செய்கிறது, ஏனெனில் 3 ஓவர்களில் ஆர்சிபி 28/0. கோலி 13, பார்த்திவ் படேல் 15 பேட்டிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x