Published : 27 Apr 2019 12:00 AM
Last Updated : 27 Apr 2019 12:00 AM
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
வெள்ளிப் பதக்கம் வென்ற திவ்யான்ஷ் சிங் பன்வார் 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். துப்பாக்கி சுடுதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் 4-வது இந்தியர் திவ்யான்ஷ் சிங் பன்வார் ஆவார். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் அஞ்சும் மவுத்கில், அபூர்வி சண்டிலா, சவுரப் சவுத்ரி ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இறுதி சுற்றில் திவ்யான்ஷ் சிங் பன்வார் 0.4 புள்ளிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை இழந்தார். பெய்ஜிங் உலகக் கோப்பையில் இந்தியா 3-வது பதக்கத்தை வென்றுள்ளது. ஏற்கெனவே கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் பன்வார், அஞ்சும் மவுத்கில் ஜோடியும்10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர், சவுரப் சவுத்திரி ஜோடியும் தங்கப்பதக்கம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT