Published : 29 Apr 2019 08:11 PM
Last Updated : 29 Apr 2019 08:11 PM
கே.எல்.ராகுல் அபரிமிதமான திறமையுடைய வீரர் விராட் கோலிக்குப் பிறகு இந்திய அணிக்காக நீண்ட காலம் சேவை செய்பவராக ராகுல் ஒளிர்வார் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ஆடும் மே.இ.தீவுகள் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிடிஐ-க்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கிறிஸ் கெய்ல் கூறியதாவது:
கே.எல். ராகுல் நிச்சயமாக என் மனதில் எழும் ஒரு வீரராகத் திகழ்கிறார், அதாவது விராட் கோலி போன்று நிறைய ஆடக்கூடியவர். விராட் கோலிக்குப் பிறகு ராகுல்தான் என்பது என் கருத்து.
நான் இப்படிக் கூறுகிறேன் என்பதாலும் கோலிக்கு அடுத்தது என்பதாலும் அவர் அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் தானாக இருக்க வேண்டும், தனக்கு எது சாத்தியமோ அந்தப் பிரதேசத்தில் இருக்க வெண்டும், யாருடனும் போட்டி போடக்கூடாது.
இந்தியாவில் நிறைய திறமைகள் உள்ளன, நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலை.
கிங்ஸ் லெவனுடன் 2 ஆண்டுகளாக இருந்து வருகிறேன், இது உண்மையில் அபாரமானது. எனக்கு பஞ்சாப் ஸ்டைல் பிடிக்கும். நிறைய பெரிய வீரர்கள், மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது, நிச்சயம் இந்த உரிமைதாரருக்காக சிறப்பாக ஏதாவது செய்வோம் என்று நம்புகிறென். இங்கிருந்து பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறுவதுதான் இப்போதைய குறிக்கோள்.
இந்திய ஒருநாள் செட்-அப்பில் என்ன ஆனது என்று தெரியவில்லை, அஸ்வின் இந்தியாவின் மிக முக்கியமான பவுலராக இருந்து வந்தார். அவர் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான பவுலர், கேப்டனாகவும் நிறைய பற்றுதலுடன் செயலாற்றுகிறார். தன்னுடைய, தன் அணியின் திறமைகள் மீது அசாத்திய நம்பிக்கை வைத்துள்ளார். ஒரு கேப்டனிடத்தில் இத்தகைய குணாசங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு கூறினார் கிறிஸ் கெய்ல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT