Last Updated : 16 Apr, 2019 07:47 PM

 

Published : 16 Apr 2019 07:47 PM
Last Updated : 16 Apr 2019 07:47 PM

தோனி, விராட் கோலியுடன் இணைந்த பந்த், ஷ்ரேயஸ் அய்யர்

தோனி, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் சாதனைகளில் அவர்களுடன் இணையும் உத்வேகத்துக்குரிய முன்னேற்றமாக பூஸ்ட் நிறுவனம் ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் அய்யரையும் விளம்பரத் தூதர்களாக நியமித்துள்ளது.

 

இது குறித்து பூஸ்ட் நிறுவன நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “பந்த் மற்ரும் அய்யர் இளம் சாதனையாளர்களாவர், வாழ்விலும் விளையாட்டிலும் சிறுவர்கள் சிறந்த முறையில் வருவதை எதிர்நோக்கும் விதமாக இளம் வீரர்கள் ஷ்ரேயஸ் அய்யர், பந்த் ஆகியோரை இணைத்துள்ளோம்” என்று கூறியுள்ளது.

 

இது குறித்து ரிஷப் பந்த் கூறும்போஹ்டு, “பூஸ்ட் குடும்பத்தின் அங்கமாவதில் எனக்கு மகிழ்ச்சி. விளையாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு பிராண்ட் இது மேலும் குழந்தைகள் பல ஆண்டுகளாக நேசிக்கும் ஒரு பிராண்ட்” என்றார்

 

ஷ்ரேயஸ் அய்யர் கூறும்போது, “இந்திய கிரிக்கெட்டின் லெஜண்டுகளுடன் கூடிய இருப்பைக் கொண்டது பூஸ்ட், விராட் கோலி, தோனி போன்று இதனுடன் சிலபல லெஜண்ட்கள் இணைந்திருக்கின்ரனர்.

 

பூஸ்ட்டுடன் என் பயணத்தில் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் அய்யர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x