Published : 11 Apr 2019 09:59 AM
Last Updated : 11 Apr 2019 09:59 AM

வார்னரின் ‘ஈகோ’ அனைவரை விடவும் பெரிது... எப்படி சமாளிப்பீர்கள்: லாங்கருக்கு கிரேம் ஸ்மித் கேள்வி

தடைக்காலம் முடிந்து மீண்டும் பகைப்புலம் நிரம்பிய ஆஸ்திரேலிய அணிக்குள் டேவிட் வார்னர் வருகிறார் என்றால் ‘அவரது ஈகோவை எப்படிச் சமாளிப்பீர்கள்?’ என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கேட்டுள்ளார்.

 

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையை மனதில் வைத்து கலக்கி வரும் வார்னர், ஆஸ்திரேலிய அணியின் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறார். ஆனால் வார்னர் தற்போது அணிக்குள் நுழைந்தால் அது அணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும், சில வீரர்கள் வார்னரை விரும்பவில்லை என்று செய்திகள் எழுபின.

 

ஆனால் இந்தச் செய்திகள் தன்னை மிகவும் வேதனையடையச் செய்வதாக கூறிய ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், குடும்பத்துக்குள் திரும்பும் சகோதரர் போல்தான் வார்னர், ஸ்மித் என்று ஊடகம் ஒன்றில் அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், வார்னர் பேட்டிங் திறமைகளைப் பாராட்டினாலும் வார்னர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில், ‘எவ்வளவு பேரை கேலி, கிண்டல் வசை பாடியிருப்பார் என்று அவரது குணாம்சத்தை கேள்விக்குட்படுத்தினார்.

 

இந்நிலையில் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் ஊடகத்துக்கு கிரேம் ஸ்மித் கூறிய போது, “அவரது வருகை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை அறிவது கடினம்.  ஆனால் அவர் பாராட்டத்தக்க பெரிய கிரிக்கெட் வீரர்தான்.

 

குறிப்பாக அவர் ஆடும்போது, பேட் செய்யும் போஹ்டு உந்துதல், தீவிரம், நன்றாக ஆடும் ஈகோ ஆகியவையுடன் மிகப்பிரமாதமான கிரிக்கெட் வீரர் ஆவார்.

 

ஆனால் தன் கிரிக்கெட் வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களை துச்சமாக மதித்தவர்தான் வார்னர். அவர் அந்தமாதிரியான டைப். இப்போதைக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு வார்னர் தேவை என்பதை விட வார்னருக்குத்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் தேவை..  என்றே நான் கருதுகிறேன்.

 

இவ்வாறு கூறினார் கிரேம் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x