Published : 30 Mar 2019 08:27 AM
Last Updated : 30 Mar 2019 08:27 AM

பஞ்சாப் - மும்பை இன்று மோதல்

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் மன்கட் அவுட், உள்வட்டத்துக் குள் 3 பீல்டர்களை நிறுத்தியது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது 3-வது ஆட்டத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை ஐபிஎல் தொடரை சர்ச்சையுடன் தொடங்கியது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக மோதிய முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின், ஜாஸ் பட்லரை மன்கட் முறையில் ரன்அவுட் செய்தது சர்ச்சையை உருவாக்கியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

விதிப்படிதான் அஸ்வின் செயல்பட்டாலும், அவர் ஆட்ட உணர்வை மீறிவிட்டதாக பலரும் குற்றம்சாட்டினர். இதே மனநிலையுடன் கொல்கத்தா அணியுடன் 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்நிலையில் சொந்த மைதானமான மொஹாலியில் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தை, மும்பைக்கு எதிராக இன்று விளையாடுகிறது பஞ்சாப் அணி.

மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தி யாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியிடம் தோல்வியடைந்த நிலையில்2-வது ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி யது. 3-வது ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்த மும்பை அணி தயாராகியுள்ளது.

டெல்லி - கொல்கத்தா மோதல்

டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x