Published : 15 Sep 2014 12:51 PM
Last Updated : 15 Sep 2014 12:51 PM

தென்னிந்திய விளையாட்டுப் போட்டி: கோவையில் அக்.7-ல் தொடக்கம்

கோவை காருண்யா பல்கலைக் கழகம் சார்பில் 22-வது காருண்யா-இவாஞ்சலின் தென்னிந்திய அளவிலான கல்லூரிகள் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. ஆடவர் கால்பந்து, ஆடவர் ஹாக்கி தவிர எஞ்சிய விளையாட்டுகள் அனைத்தும் மின்னொளியில் நடைபெறுகின்றன.

வாலிபால், கபடி, கூடைப்பந்து ஆகியவை ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடை பெறுகின்றன. இதுதவிர தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் கல்லூரிகள் முன்பதிவு செய்வதற்கு வரும் 20-ம் தேதி கடைசி நாளாகும். அதற்கான விண்ணப்பங்களை “போட்டி செயலாளர், காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா நகர், கோயம்புத்தூர்-641114” என்ற முகவரிக்கோ அல்லது director_ped@karunya.edu / ped_kemt@karunya.edu என்ற இணையதள முகவரிக்கோ அனுப்பலாம்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422-2614670 / 9487846509 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் காருண்யா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x