Published : 08 Mar 2019 07:14 PM
Last Updated : 08 Mar 2019 07:14 PM

ஜார்கண்ட் போட்டியில் தோனிக்கு ஓய்வு அளிக்க வேண்டும்: மஞ்சுரேக்கர் ட்வீட்டும் நெட்டிசன்கள் ஆவேசமும்

ஜார்கண்ட் மைதானத்தில் இன்று ஸ்டேடியத்தின் ஒரு பகுதிக்கு தோனி பெயர் சூட்டப்பட்டதையடுத்து அங்கு ரசிகர்கள் தோனி என்று ஷர்ட் அணிந்து கொண்டு உற்சாகமாக தங்கள் ‘தல’யை ரசித்து வரும் நிலையில் முன்னாள் வீரர் இந்நாள் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கர் தன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.

 

ஏற்கெனவே ஜார்கண்டில் இது தோனி ஆடும் கடைசி சர்வதேச போட்டி இதுவோ என்று நிருபர்கள் தரப்பில் கூற அதற்கு புவனேஷ்வர் குமார் ‘அது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று மடக்கியதும் நடந்தது.

 

இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் இன்று  “இன்று இந்திய அணி தோனிக்கு  ஓய்வு அளிக்க வேண்டும்” என்று ட்வீட் செய்திருந்தார்.

 

இது தோனி ரசிகர்களான நெட்டிசன்கள் மத்தியில் கடும் கோபாவேசங்களைக் கிளப்பியுள்ளது.

 

ராகுல் மஜும்தார் என்பவர், “இந்தியா இன்று உங்களை வர்ணனையிலிருந்து நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

 

இன்னொரு நபர், ‘இந்தியாவின் ரஸல் ஆர்னால்ட்’ என்று இவரது அகால கருத்தை வைத்து கிண்டலடித்துள்ளார்.

 

இன்னொரு நெட்டிசன், ‘என்னை போட்டு வறுத்தெடுங்கள் என்பதற்கான ட்வீட்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

ஐசிசி உங்களை வர்ணனையிலிருந்தே தடை செய்ய வேண்டும் என்றும் பலவிதமாக மஞ்சுரேக்கருக்கு பதிலடிகள் கிடைத்து வருகின்றன.  தொடர்ந்து மஞ்சுரேக்கர் தோனி ரசிகர்களை கோபாவேசப்படுத்தும் விதமான கருத்துகளை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது 27/3 என்ற நிலையிலிருந்து 314 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி தோனியும் கோலியும் இன்னிங்சை மறுகட்டமைத்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x