Published : 07 Mar 2019 12:31 PM
Last Updated : 07 Mar 2019 12:31 PM
கூல் தோனி எப்போதும் தன்னடக்கத்துக்குப் பெயர் பெற்றவர் என்பதை நிரூபிக்கும் இன்னொரு அதிசய நிகழ்வு நடந்துள்ளது. எதற்கெடுத்தாலும் தலைமை, அங்கீகாரம் என்று அலையும் இந்தத் திருநாட்டில் ஜார்கண்ட் ஸ்டேடிய பெவிலியனுக்கு தன் பெயரைச் சூட்டும் வைபவத்தை தொடங்கி வைக்க தன்னடக்கத்துடன் மறுத்து விட்டார் தோனி.
3வது ஒருநாள் போட்டி ஜார்க்கண்டில் நாளை நடைபெறவுள்ள நிலையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
“கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நார்த் பிளாக் ஸ்டாண்ட், விஐபி பாக்சஸ் ஆகியவை அடங்கிய ஸ்டேடியத்தின் ஒருபகுதிக்கு தோனி பெவிலியன் என்று பெயரிடவும் முடிவு எடுக்கப்பட்டது” என்று ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ஆனால் இதனை தோனியே தொடங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தோனி நிராகரித்து விட்டார். “நாங்கள் தோனியிடம் துவங்கி வைக்குமாறு கேட்டோம், அவர் உடனே, ‘என் சொந்த வீட்டில் நானே துவங்கி வைக்க என்ன இருக்கிறது?’ என்றார், அவர் இன்னமும் தன்னடக்கமும் எளிமையும் இயல்பாகவும்தான் இருக்கிறார்” என்று சக்ரவர்த்தி ஆச்சர்யத்துடன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT