Last Updated : 22 Sep, 2014 11:36 AM

 

Published : 22 Sep 2014 11:36 AM
Last Updated : 22 Sep 2014 11:36 AM

ஆசிய போட்டி துப்பாக்கிச் சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்

17-வது ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

தென்கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 25 மீ. துப்பாக்கி சுடுதல் பிரிவில் உலக தர வரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் அயோனிகா பால், அபுர்வி சந்தேலா, ராஜ் சவுத்ரி ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 4-ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்துள்ளனர்.

சீனாவின் சிலிங் யீ, பின்பின் ஷாங், லியூஸி வ்யூ அணி தங்கத்தையும், இரானின் நாஜ்மா கெத்மாடி, நர்ஜேஸ் அந்தேவாரி, எலாஹி அகமதி அணி வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x