

வெலிங்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரைக் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 253 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்குப்பின் நியூசிலாந்து வந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.
44.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு நியூசிலாந்து அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தியத் தரப்பில் யஜுவேந்திர சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஷமி, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்கள்.