Published : 19 Feb 2019 05:58 PM
Last Updated : 19 Feb 2019 05:58 PM

ஐபிஎல் 2019 முதல் போட்டி: சென்னை - பெங்களூரு அணிகள் ட்விட்டரில் சுவாரஸ்ய மோதல்

2019 ஐபில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோத உள்ளனர். இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தங்களது முதல் போட்டி குறித்து சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

12-வது ஐபிஎல் போட்டி மார்ச் 23-ம் தேதி தொடங்குகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் (டேர்டெவில்ஸ் பெயர் மாற்றம்), மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

சென்னையில் மார்ச் 23-ம் தேதி மாலை நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மோதுகிறது.

இந்த நிலையில் 2019 ஐபிஎல் முதல் ஆட்டத்தில் மோதிக்கொள்ளும் இரு அணிகளும் ட்விட்டரில் சுவாரஸ்யமாகப் பதிவிட்டுள்ளனர். 

முதல் போட்டியில் சென்னையுடன் மோதுவது குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது ட்விட்டட் பக்கத்தில், ''தென்னிந்தியாவின் ருசியான உணவுகளுடன் ஆரம்பிக்கிறது. இருப்பினும்  நாங்கள் சுவையான சாம்பாரை செய்வோம்'' என்று பதிவிட்டது.

இதனைக் குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ''அந்த சாம்பார் மஞ்சள் நிறத்தில்தானே இருக்கும்'' என்று சிஎஸ்கே வெற்றி பெறும் என்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x