

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி கடினமான பிரிவில் இடம் பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் வரும் டிசம்பர் 6 முதல் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான டிராவை சர்வதேச ஹாக்கி சம்மேளனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி ஏ பிரிவில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இங்கிலாந்து, ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பெல்ஜியம், நடப்பு ஆசிய சாம்பி யனான பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
பி பிரிவில் இந்தியா, ஒலிம்பிக் சாம்பியனான ஜெர்மனி, உலக கோப்பையில் 2-வது இடம்பிடித்த நெதர்லாந்து, உலகக் கோப்பையில் வெண் கலப் பதக்கம் வென்ற அர்ஜென்டீனா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.