Published : 24 Sep 2014 10:22 AM
Last Updated : 24 Sep 2014 10:22 AM

ஆசிய விளையாட்டு துடுப்புப் படகுப் போட்டி: இந்திய வீரர் வெண்கலம் வென்றார்

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி, தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், துடுப்புப் படகுப் போட்டியில் இந்திய வீரர் துஷ்யந்த் வெண்கலம் வென்றார்.

1000 மீட்டர் தூரத்தை கடப்பதில், முதல் 500 மீட்டரை கடுக்கும்போது இந்திய வீரர் சிறப்பாக விளையாடினார். அவர் தங்கப் பதக்கம் பெறுவார் என கருதப்பட்டது.

ஆனால், அடுத்து 500 மீட்டர் தூரத்தில் அவரது வேகம் தளர்ந்தது. இதனால், அவரால் வெண்கலப் பதக்கமே வாங்க முடிந்தது. ஹாங்காங் வீரர் தங்கம் வென்றார். தென் கொரிய வீரர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x