Published : 19 Sep 2014 08:37 PM
Last Updated : 19 Sep 2014 08:37 PM

டோக்கியோ ஓபன் இறுதிச் சுற்றில் சானியா - காரா இணை

டோக்கியோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா - ஜிம்பாப்வேயின் காரா பிளாக் இணை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சானியா - காரா இணை, செர்பியாவின் ஜெலீனா ஜான்கோவிச் - ஸ்பெயினின் அரண்ட்ஸா பாரா சன்டோன்ஜா இணையை எதிர்கொண்டது.

இப்போட்டியில் சானியா - காரா இணை மிகச் சிறப்பாக விளையாடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செர்பியா - ஸ்பெயின் இணையை வீழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x