Published : 20 Jan 2019 12:48 PM
Last Updated : 20 Jan 2019 12:48 PM

ஆட்டத்தின் போது ‘ஏமாற்று வேலை’யில் ஈடுபட்டாரா மரியா ஷரபோவா? பத்திரிகையாளர் கேள்வி எழுப்பிய போதும் கோபம்

ஆஸ்திரேலிய வளரும் நட்சத்திரம் ஆஷ்லி பார்ட்டியிடம் 3 செட்களில் தோல்வியடைந்த ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா 2வது செட்டில் தோற்ற பிறகு ‘டாய்லெட்’ பிரேக் எடுத்துக் கொண்டது சர்ச்சையாகியுள்ளது.

 

முதல் செட்டில் 6-4 என்று வென்ற ஷரபோவா 2வது செட்டில் 6-1 என்று தோற்றார். இதனையடுத்து டாய்லெட்டுக்குச் சென்ற மரியா ஷரபோவா திரும்ப அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக சர்ச்சை கிளம்பியது. கிட்டத்தட்ட 7-8 நிமிடங்கள் ஆட்டம் இதனால் தடைபட்டதாக தெரிகிறது.

 

மீண்டும் மைதானத்துக்கு ஷரபோவா திரும்பிய போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவரை சப்தம் எழுப்பி கடுமையாக கேலி செய்தனர்.

 

விதிமுறை மீறல் இல்லையென்றாலும் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது என்றும் அவர் கூடுதல் ஓய்வு எடுத்துக் கொண்டு பிரஷ்ஷாக திரும்புவதற்காக மேற்கொண்ட ஏமாற்று வேலை என்றும் ஆஸி. ரசிகர்கள் கடுமையாக ஆவேசமடைந்தனர்.

 

பிற்பாடு பத்திரிகையாளர் ஒருவர் இது குறித்து மரியா ஷரபோவாவிடம், கேள்வி எழுப்ப கோபமடைந்த மரியா, “இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? என்றார், ஆனால் பத்திரிகையாளர் விடாப்பிடியாக உண்மை என்னவென்று கூறுங்கள் என்று வலியுறுத்த ஷரபோவா கடும் அதிருப்தி அடைந்து, “இது மிகவும் சில்லித்தனமான கேள்வி” என்று கூறிவிட்டு ஒதுங்கினார்.

 

ஆனால் வெற்றி பெற்ற பார்ட்டி, ஷரபோவாவுக்கு ஆதரவாகக் கூறிய போது, “அவர் விதிப்படிதான் நடந்து கொண்டார். ஆட்டத்திற்கிடையே ஒருமுறை டாய்லெட் பிரேக் எடுத்துக் கொள்ளலாம். அவர் லாக்கர் ரூமுக்குக் கூட சென்றிருக்கலாம், இதில் நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. நான் காத்திருக்க வேண்டியதுதான், ஏனெனில் விதிப்படி அது சரியே. இது எனக்கு கவலையளிக்கவில்லை” என்றார் பார்ட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x