Published : 24 Jan 2019 04:40 PM
Last Updated : 24 Jan 2019 04:40 PM
நேப்பியர் மைதானத்தில் நியூசிலாந்துடனான ஒரு நாள் போட்டிக்குப் பிறகு,ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் தோனி, கோலி இருவரும் ஏறி விளையாடினர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி வரலாற்று வெற்றியை இந்திய அணி பெற்றது. அதன்பின் அங்கிருந்து நியூசிலாந்து சென்ற இந்திய அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
நேப்பியரில் நேற்று (புதன்கிழமை) நடந்த முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. வெயில் காரணமாக இலக்கு 49 ஓவர்களுக்கு 156 ரன்கள் என மாற்றப்பட்டது. வெறும் 34.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் தோனி, கோலி ஆகிய இருவரும் ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் வண்டியில் ஏறி விளையாடினர். பந்து செல்லும் திசைக்கு ஏற்றவாறு, வேகமாக நகர்ந்து காட்சிகளைப் படம் பிடிக்க ஏதுவாக இந்த வண்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏறி இருவரும் வட்டமடித்து, விளையாடினர்.
பிசிசிஐ வெளியிட்ட இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வீடியோ
Post-game shenanigans courtesy @msdhoni & @imVkohli
— BCCI (@BCCI) January 23, 2019
This looks fun #TeamIndia #NZvIND pic.twitter.com/0EXXHYh2v7
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT