Published : 19 Jan 2019 01:59 PM
Last Updated : 19 Jan 2019 01:59 PM
என்னிடமிருந்து பந்தை எடுத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நான் ஓய்வு பெறுவதாக அவர்கள் கூறி விடுவார்கள் என்று தோனி கிண்டலாக தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற 3வது, இறுதி ஒருநாள் போட்டியில் தோனி (87 நாட் அவுட்), கேதார் ஜாதவ் (61 நாட் அவுட்) ஆகியோரது அபாரக் கூட்டணியினால் 231 ரன்கள் வெற்றி இலக்கை மிகவும் நேர்த்தியுடன் விரட்டி 49.2 ஒவர்களில் 234/3 என்று அபார வெற்றி பெற்றது இந்திய அணி.
இந்த நிலையில் ஆட்டம் முடிந்த மைதானத்திலிருந்து வீரர்களுக்கு கைக் குலுக்கி வெளியேறும்போது, தனது கையில் பந்தை வைத்திருந்தார் தோனி.அப்போது எதிரே வந்த இந்திய அணி பயிற்சியாளர் சஞ்சய்யிடம், “ என்னிடமிருக்கும் பந்தை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் நான் ஓய்வு பெற போகிறேன் என்று அவர்கள் கூறுவார்கள்” என்று சிரித்தப்படி கூறினார்.
இதற்கு முன்னர் சில ஆட்டங்களில் தோனி போட்டி முடிந்தவுடன் கையில் பந்தை எடுத்து சென்ற போதுபோது, அவர் ஓய்வு பெற இருப்பதாக சிலர் கூறியதற்கு,ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் தற்போது தோனி பதிலளித்திருக்கிறார்.
See #Dhoni when gave ball to the coach and said " Ball lelo nahi to bolega retirement lerahe ho"
— Lakshay Rohilla (@lakshayrohilla3) January 18, 2019
even even #Dhoni wants to play more. #AUSvIND #INDvAUS #Chahal #Jadhav #WhistlePodu@ChennaiIPL pic.twitter.com/B5dMVQEzhR
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT