Last Updated : 02 Jan, 2019 07:26 PM

 

Published : 02 Jan 2019 07:26 PM
Last Updated : 02 Jan 2019 07:26 PM

சச்சின் டெண்டுல்கரின் ஆதர்சம், நல்லாசிரியர், பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கர் காலமானார்

இந்திய அணிக்கும் உலக கிரிக்கெட்டுக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை வளர்த்து உருவாக்கிக் கொடுத்த பயிற்சியாளரும் துரோணாச்சரியர் விருது பெற்றவருமான ராமாகந்த் அச்ரேக்கர் புதனன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

 

அதிய வயதானதால் ஏற்படும் நோய்களினால் பாதிக்கப்பட்டு அவர் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

 

சச்சின் டெண்டுல்கர் மட்டுமல்லாது பிரவீண் ஆம்ரே, வினோத் காம்ப்ளி, சமீர் டீகே போன்ற வீரர்கள் மற்றும் பல்வீந்தர் சிங் சாந்து ஆகியோரையும் உருவாக்கியவர் ராமாகந்த் அச்ரேக்கர்.

 

சச்சின் டெண்டுல்கரை அச்ரேக்கரிடம் அறிமுகப் படுத்தியது சச்சின் சகோதரர் அஜித். சிவாஜி பார்க் மைதானத்தில் சச்சின் அச்ரேக்கரின் கீழ் தன் கிரிக்கெட் வாழ்வை உருப்படுத்திக் கொண்டார். அதிலிருந்து குரு-சிஷ்ய உறவு இருவருக்கும் இடையே உறுதியாக வளர்ந்து வந்தது.

 

சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற போது அச்ரேக்கரின் பங்கை பெரிய அளவில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x