Published : 15 Dec 2018 03:11 PM
Last Updated : 15 Dec 2018 03:11 PM

ஸ்டீவ் ஸ்மித், வார்னர் தடைக்குப் பிறகு டெஸ்ட்டில் முதல் 300+ ஸ்கோரை எட்டிய ஆஸி.

அடிலெய்ட் தோல்விக்குப் பிறகு தொடரைக் காப்பாற்ற பாடுபட்டு வரும் ஆஸ்திரேலியா அணி பெர்த் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்தது.

 

தென் ஆப்பிரிக்காவில் நடந்த பால்டேம்பரிங் விவகாரத்தில் வார்னர், ஸ்மித், பேங்கிராப்ட் ஆகியோர் தடைசெய்யப்பட்ட பிறகு டெஸ்ட் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 300 ரன்களைத் தாண்டி 326 ரன்கள் எடுத்துள்ளது.

 

கடந்த மார்ச்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெற்ற டெஸ்ட் வெற்றிதான் ஆஸ்திரேலியா அணி பெற்ற கடைசி டெஸ்ட் வெற்றியாகும். முதல்  இன்னிங்சில் 351 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. வார்னர் 51, ஸ்மித் 56. ஆஸ்திரேலியா 118 ரன்களில் அந்த டெஸ்ட்டை வென்றது.

 

இந்தத் தொடரில் இந்திய பேட்ஸ்மென் புஜாரா சதமெடுக்க ஒரு ஆஸ்திரேலிய வீரர் கூட இந்தத் தொடரில் சதம் எடுக்கவில்லை. மார்கஸ் ஹாரிஸ் 70, பிஞ்ச் 50, ட்ராவிஸ் ஹெட் 58.  ஷான் மார்ஷ் 45, டிம் பெய்ன் 38 ஆகியவற்றினால் ஆஸ்திரேலியா 326 ரன்களை எட்டியது.

 

டர்பன் வெற்றிக்குப்பிறகு ஆஸ்திரேலியா 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி தழுவி 1-ஐ ட்ரா செய்தது, அது கவாஜாவின் மிகப்பிரமாதமான இன்னிங்சினால் பாகிஸ்தானுக்கு எதிராக செய்யப்பட்ட ட்ரா.

 

இந்நிலையில் மீண்டும் 326 ரன்களை எடுத்து ஆஸ்திரேலியா வெற்றிக் கனவு காண்கிறது. ஆனால் இந்தியா சிறப்பாக பேட் செய்து 3 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்துள்ளது.  கிங் கோலி மிகப்பிரமாதமான ஒரு இன்னிங்சை ஆடிவருகிறார், அவர் 72 ரன்களுடனும், ரஹானே அரைசதம் எடுத்தும் ஆடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x