Published : 14 Dec 2018 07:30 PM
Last Updated : 14 Dec 2018 07:30 PM

பாருப்பள்ளி காஷ்யபை மணந்தார் சாய்னா நேவால்

முன்னாள் பாட்மிண்டன் உலக நம்பர் 1 நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலுக்கும் சக டென்னிஸ் வீரர் காஷ்யபிற்கும் வெள்ளிக்கிழமையன்று மும்பையில் திருமணம் நடந்தேறியது.

 

இதனை டென்னிஸ் நட்சத்திரங்கள் தங்கள் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தளங்கள் மூலம் அறிவித்துள்ளனர்.

 

“பெஸ்ட் மேட்ச் ஆஃப் மை லைஃப்” என்ற வாசகத்துடன் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் காஷ்யப். இருவரும் காதலித்து வந்ததாக செய்திகள் எழுந்த நிலையில் இருவரும் இது பற்றி எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் காத்தனர்.

 

ஆனால் சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவித்தனர்.

 

2007-லேயே இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது என்று சாய்னா நெவால் தெரிவித்திருந்தார், ஆனால் பாட்மிண்டன் காரணமாக திருமணத்தை ஒத்திப் போட்டு வந்துள்ளனர்.

 

“இன்றைய போட்டி நிறைந்த உலகில் ஒருவருடன் நெருங்கிப் பழகுவதே கடினம். ஆனால் எப்படியோ எங்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது” என்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவித்தார்.

 

தன் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டியதில்லை, அவர்களுக்கு ஏற்கெனவே தெரியும் நானும் காஷ்யபும் சேர்ந்து தொடர்களுக்குச் செல்லும் போது என் பெற்றோரும் வந்துள்ளனர். ஆகவே நான் யாருடன் நெருங்கிப் பழகுகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும்.

 

சமீபத்தில் ஜகார்த்தாவில் ஆசியப் போட்டிகளில் வெண்கலம் வென்ற சாய்னா, உலக பேட்மிண்டன் தரவரிசையில் 9ம் இடத்தில் உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x