Last Updated : 16 Dec, 2018 10:54 AM

 

Published : 16 Dec 2018 10:54 AM
Last Updated : 16 Dec 2018 10:54 AM

ஹேண்ட்ஸ்கம்ப் நேர்மைப் பிரச்சினையா? களநடுவர் சாஃப்ட் சிக்னல்கள் தேவையா? கடும் விவாதங்களைக் கிளப்பும் விராட் கோலி அவுட்

பெர்த் டெஸ்ட் போட்டியில் அதியற்புதமாக ஆடிய விராட் கோலி 123 ரன்களில் பிடிக்கப்படாத கேட்சுகு தவறாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.

 

கமின்ஸ் வீசிய பந்தை விராட் கோலி தன் உடலுக்கு சற்று தள்ளி மட்டையை நீட்டி ட்ரைவ் ஆட முயன்றார், ஆனால் வலது கையை தளர்த்தியதால் பீல்டர் கைக்கு அது கிளீனாகச் செல்லவில்லை.

 

ஹேண்ட்ஸ்கம்ப் விரல்கள் பந்துக்கு அடியில் இருந்ததா? அல்லது பிட்ச் ஆனபிறகு எடுத்து விட்டு கேட்ச் என்று சாதித்தாரா என்று புரியவில்லை. விராட் கோலி அது நிச்சயம் அவுட் இல்லை என்று சந்தேகம் எழுப்ப 3வது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது. 3வது நடுவர் நீஜல் லாங்.

 

அப்பீல் செய்யும் போது களநடுவர் தான் என்ன நினைக்கிறார் என்பதை கூறியாக வேண்டும், அவர் அவுட் என்று ஒரு சாஃப்ட் சிக்னல் கொடுத்தார். காரணம் பீல்டர் தான் கேட்ச் பிடித்ததாக உரிமை கொண்டாடுகிறார், ஆகவே அதனடிப்படையில் அவுட் என்றார். அப்படியிருக்கையில் எதற்கு 3வது நடுவரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்?

 

அப்படி மேல்முறையீடு செய்தால் தெளிவான முடிவுகள் இருந்தால்தான் கள நடுவரின் சாஃப்ட் சிக்னலுக்கு எதிராக 3வது நடுவர் அவுட்டோ, நாட் அவுட்டோ வழங்க முடியும்.  ஆனால் வீடியோ ரீப்ளேயில் பந்து தரையில் பட்டு கையில் சென்றதாகத் தெளிவாகவே காட்டியது, இமேஜ் பெரிதாகப்பட்டு காட்டப்பட்ட போதும் தரையில் பட்ட பிறகுதான் கைக்குச் சென்றது. இப்போது பீல்டருக்கு நிச்சயமாகத் தெரியும் தான் கேட்ச் எடுத்தோமா இல்லையா என்று? கேட்ச் எடுத்ததில் சந்தேகம் இருப்பதாக வீரர் தெரிவித்தால் அது மோசடியே. அப்படி ஹேண்ட்ஸ்கம்ப் தெரியவில்லை என்றால் களநடுவர் எப்படி சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுக்க முடியும்?

 

நடுவர் சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுத்ததுதான் ஆதாரங்கள் சரியாக இல்லாத போது இறுதியானது என்றால் எதற்கு 3ம் நடுவர் ரெஃபரல் அமைப்பு? சரி ஆதாரங்கள் விராட் கோலிக்குச் சாதகமாக இருக்கும் போது சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு அளிக்கப்பட வேண்டுமென்பதுதானே கிரிக்கெட்டின் நடைமுறை விதி? ஏனெனில் பேட்ஸ்மெனுக்கு ஒருமுறை அவுட் கொடுத்தால் அவ்வளவுதான் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும் ஆனால் பவுலருக்கு அடுத்தடுத்து அதே பேட்ஸ்மெனை வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆகவேதன சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மெனுக்கு என்பது நடைமுறை விதி.

 

ஆனால் பீல்டரை நம்ப வேண்டும் என்று எந்த அடிப்படையில் எடுத்துக் கொள்ளப்பட்டது? அப்படி பீல்டருக்கு தெரியவில்லை என்றால் நடுவர் எப்படி சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுக்க முடியும்? இதனால் சாஃப்ட் சிக்னல் அவுட்கள் மீது புதிய விவாதம் தேவை.

 

வெறுப்பில் சென்ற கோலி பொதுவாக ரசிகர்கள் கைதட்டலை அங்கீகரிப்பார், ஆனால் இந்த  மோசடி அவுட்டினால் அவர் வெறுப்பில் ஹெல்மெட்டை தூக்கி எறிந்து விட்டு பெவிலியன் சென்றார், ரசிகர்கள் கைதட்டலை அவர் அங்கீகரிக்கவில்லை.

 

பொதுவாக ஆஸ்திரேலிய வீரர்கள், பீல்டிங்கில் மோசடி செய்ததற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு, இதில் ஒன்றுதான் 2008 சிட்னி டெஸ்ட், இதில் கடைசி நாளில் சவுரவ் கங்குலிக்கு இதே போன்று கேட்சா இல்லையா என்ற சர்ச்சையின் போது கேப்டன் ரிக்கி பாண்டிங்கே கங்குலிக்கு அவுட் கொடுத்த கொடுமையையும் நாம் பார்த்திருக்கிறோம். பிரையன் லாராவுக்கு ஸ்டீவ் வாஹ் தரையில் பட்டு கேட்ச் எடுத்து அவுட் வாங்கியுள்ளார், இப்படி எத்தனையோ மோசடிகளை ஆஸ்திரேலிய வீரர்கள் எதிரணியினருக்குச் செய்துள்ளனர் என்பதுதான் வரலாறு எனும்போது ஹேண்ட்ஸ்கம்பின் ‘அல்லாத கேட்சை’ எப்படி நடுவர் ஏற்றுக் கொண்டு சாஃப்ட் சிக்னல் அவுட் கொடுத்தார் என்பதே நம் கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x